Thursday, December 9, 2021

16. வாருங்களேன் வாருங்களேன்(கோபியரே கோபியரே)

 16. (143-152)
ப்ராஜிஷ்ணுர் போஜநம் போக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ: |
அநகோ விஜயோ ஜேதா விஸவயோநி:புநர்வஸு: ||

சுயம்ப்ரகாச ஒளியுடன் உணர்வின்சோதி யானவன்
புலன்வயம் படும்பொருள் தனில்படா திருப்பவன்
அதில்படும் உயிர்களின் குறைதனைப்  பொறுப்பவன்
உதிக்குமண்ட மானவன் அதற்குமுன்  னிருப்பவன்
 தொற்றும் பாவமற்றவன்  என்றும்எதிலும் வெற்றியைப்
பெற்றிருக்கும் கொற்றவன் தோல்விஎன்றும் அற்றவன்
சுற்றுருண்ட  அண்டம்தன்னை தோன்றச்செய்த காரணன்
மற்றிருக்கும்  யாவினுள்ளும் உள்ளுமான ஆண்டவன்
--------------------------


வாருங்களேன் வாருங்களேன் கொஞ்சமிங்கே வாருங்களேன்
மாலனவன் பெயர்களிலே என்ன எழில் பாருங்களேன்
மாலனவன் பெயர்களிலே என்ன எழில் பாருங்களேன்-c
(SM)
வாருங்களேன் வாருங்களேன் கொஞ்சமிங்கே வாருங்களேன்
மாலனவன் பெயர்களிலே என்ன எழில் பாருங்களேன்
மாலனவன் பெயர்களிலே என்ன எழில் பாருங்களேன்-c

யோகத்துயில் கிடக்கிறவன் பொன் மயமாய் மின்னுபவன் 
தான் கொண்ட தன்னுணர்வில் ஒளிமயமாய் ஜொலிக்கிறவன் 
தான் கொள்ளும் யோகத்துயில் தன்னுணர்வாய் ஜொலிக்கிறவன்-c
யோகத்துயில் கிடக்கிறவன் பொன் மயமாய் மின்னுபவன் 
தான் கொண்ட தன்னுணர்வில் ஒளிமயமாய் ஜொலிக்கிறவன்
வாருங்களேன் வாருங்களேன் கொஞ்சமிங்கே வாருங்களேன்
மாலனவன் பெயர்களிலே என்ன எழில் பாருங்களேன்
மாலனவன் பெயர்களிலே என்ன எழில் பாருங்களேன்-c
 (MUSIC)

கண்டிடுவோர் புலன்களையே கவர்ந்திழுக்கும் பொருள்களைத்தான் 
படைத்திருந்தும் தனித்திருக்கும் பேரழகைப் பாருங்களேன்
படைத்திருந்தும் தனித்திருக்கும் பேரழகைப் பாருங்களேன்-c
கண்டிடுவோர் புலன்களையே கவர்ந்திழுக்கும் பொருள்களைத்தான் 
படைத்திருந்தும் தனித்திருக்கும் பேரழகைப் பாருங்களேன்
குந்துமணி அளவுமவன் புலன்வயத்தில் இல்லாமல் 
அதில் உழன்றே இரும் உயிரை பொறுப்பதையும் பாருங்களேன் 
அதில் உழன்றே இரும் உயிரை பொறுப்பதையும் பாருங்களேன்-c
குந்துமணி அளவுமவன் புலன்வயத்தில் இல்லாமல் 
அதில் உழன்றே இரும் உயிரை பொறுப்பதையும் பாருங்களேன்
வாருங்களேன் வாருங்களேன் கொஞ்சமிங்கே வாருங்களேன்
மாலனவன் பெயர்களிலே என்ன எழில் பாருங்களேன்
மாலனவன் பெயர்களிலே என்ன எழில் பாருங்களேன்-c
 (MUSIC)

ஆதியினில் அண்டம்தனை படைத்து-அதை ஆளுபவன்
அதில் உதிக்கும் எவற்றினுள்ளும் பொருளும் உயிரும் ஆகிறவன்
அதில் உதிக்கும் எவற்றினுள்ளும் பொருளும் உயிரும் ஆகிறவன்-c
ஆதியினில் அண்டம்தனை படைத்து-அதை ஆளுபவன்
அதில் உதிக்கும் எவற்றினுள்ளும் பொருளும் உயிரும் ஆகிறவன்
தேடிவரும் பாவங்களும் ஓடிவிடச் செய்கிறவன் 
எங்கும் எதையும்  என்றும் எதிலும் வெற்றிதனைப் பெறுகிறவன்
எங்கும் எதையும்  என்றும் எதிலும் வெற்றிதனைப் பெறுகிறவன்-c
தேடிவரும் பாவங்களும் ஓடிவிடச் செய்கிறவன் 
எங்கும் எதையும்  என்றும் எதிலும் வெற்றிதனைப் பெறுகிறவன்
வாருங்களேன் வாருங்களேன் கொஞ்சமிங்கே வாருங்களேன்
மாலனவன் பெயர்களிலே என்ன எழில் பாருங்களேன்
மாலனவன் பெயர்களிலே என்ன எழில் பாருங்களேன்-c


முதல் பக்கம்


No comments:

Post a Comment