Tuesday, December 7, 2021

0.அழகாய்ப் பொருளறிந்து ஓதிடுவோம்(அழகன் முருகனிடம் ஆசை கொண்டேன்)

 

நித்தியம் மனம் எண்ணியே  ..ஆ..ஆ..ஆ..

ஆயிரம் மாலனின் நாமமும்  

அழகாய்ப் பொருளறிந்து ஓதிடுவோம்   ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ

(MUSIC)

அழகாய்ப் பொருளறிந்து ஓதிடுவோம் 

நம் மாலவனை நாம்-பணிந்து போற்றிடுவோம்

(Short Music)

அழகாய்ப் பொருளறிந்து ஓதிடுவோம் 

நம் மாலவனை நாம்-பணிந்து போற்றிடுவோம்

(Short Music)

உள்ளம் தனில் பெயரைப் பதித்திடுவோம் 

அதன் பொருளை அறிந்தவனைத் துதித்திடுவோம்  

உள்ளம் தனில் பெயரைப் பதித்திடுவோம் 

அதன் பொருளை அறிந்தவனைத் துதித்திடுவோம்  ஆ..ஆ..ஆ..

அழகாய்ப் பொருளறிந்து ஓதிடுவோம் 

நம் மாலவனை நாம்-பணிந்து போற்றிடுவோம்

(MUSIC)

தனியொரு ஆளெனவே உலகினைப் படைத்தவனை ..ஆ ..ஆ 

தனியொரு ஆளெனவே உலகினைப் படைத்தவனை

ஒன்றி தினம் ஓதிடுவோம்  என்று மனம் எண்ணியதால்

ஒன்றி தினம் ஓதிடுவோம் என்றென் மனம் எண்ணியதால்

எண்ணிறந்த பேரழகாய் காட்டுமவன் பெயரழகை

எண்ணிறந்த பெயரழகாய்  காட்டுமவன் பேரழகை

உள்ளத்தால் பாடவும்தான் உண்மையைத் தேடவும் தான்  

நன்மையை நாடவும் தான்  ஆ..ஆ..ஆ..

அழகாய்ப் பொருளறிந்து ஓதிடுவோம் 

நம் மாலவனை நாம்-பணிந்து போற்றிடுவோம்

(MUSIC)

மலையை எடுத்தவனை அலைமேல் படுத்தவனை (2)

மெய்யுருகப் பாடிப் பண்ணால் மெய்யை நாம் நாடிடவே

மெய்யுருகப் பாடிப் பின்னால் மெய்யை நாம் நாடிடவே

பெயரும் பொருளாலே பொருளும் பெயராலே

பெயர் மெய்ப்பொருளாமே பொருள் மெய்ப் பெயராமே 

என்று-நான் கண்ட நிஜம் உலகுக்குத் தரலானேன் 

உலகுக்குத் தரலானேன் ஆ...ஆ... 

அழகாய்ப் பொருளறிந்து ஓதிடுவோம் 

நம் மாலவனை நாம்-பணிந்து போற்றிடுவோம்


முதல் பக்கம்


No comments:

Post a Comment