Wednesday, December 8, 2021

13. அவனுக்கு இல்லை ஒரு பிறப்பு(மலர்களிலே பல நிறம் கண்டேன்)

13. (115-123)
ருத்ரோ  பஹுசிரா  பப்ருர்   விச்வயோநிஸ் ஸுசிஸ்ரவா  |
அம்ருதஸ் சாஸ்வத  ஸ்தாணுர்   வராரோஹோ  மஹாதப :   ||

நெகிழ்ந்தகண் சுரப்பவன்  எழுந்தபல் சிரத்தவன்
ஏழுலகின்  அரசனாம்  அவைபிறந்த கர்ப்பமாம்
எழிலுமான புனிதமான பெயர்கள்கொண்ட சிறப்பவன்
 பிறந்திடாநல்  பிறப்பவன் இறந்திடாமல் இருப்பவன்
நிலைத்துநிற் பதாயிருந் தசைவுறா  நிரந்தரன்
முயன்றுசென் றடைவதாய் சிறந்திருக்கு மோரிடம் 
பயின்றநல் தவத்திலே உறைவதான  ஞானமாம்

************************* 

அவனுக்கு என்றும் தனிச்சிறப்பு அவன் கொள்வதுமில்லை பிறப்பிறப்பு
அவன் பெயர் ஆஹா தனிவனப்பு தவம் புனிதமும் ஞானமும் அவன் இருப்பு  
அவனுக்கு என்றும் தனிச்சிறப்பு அவன் கொள்வதுமில்லை பிறப்பிறப்பு
(MUSIC)
அவன் கருவறையில் உருவாகும் ஏழுலகும் அவன் ராஜாங்கம் (2)
அசைவு இல்லை எனும் படியாகும் நிலை கொண்ட நிரந்தர நிஜமாகும்
அவன் அசைவு இல்லை எனும் படியாகும் நிலை கொண்ட நிரந்தர நிஜமாகும் 
அவனுக்கு என்றும் தனிச்சிறப்பு அவன் கொள்வதுமில்லை பிறப்பிறப்பு
 (MUSIC)

எழுந்திடும் பற்பல சிரத்தாலே நெகிழ்ந்திரும் அவன் கண் சுரப்பாலே (2)
முயன்றிடும் பக்தர்கள் முனைப்பாலே புகல் அடைந்திட அவன் ஓர் இடமாமே (2)
அவனுக்கு என்றும் தனிச்சிறப்பு அவன் கொள்வதுமில்லை பிறப்பிறப்பு
அவன் பெயர் ஆஹா தனிவனப்பு தவம் புனிதமும் ஞானமும் அவன் இருப்பு  
அவனுக்கு என்றும் தனிச்சிறப்பு அவன் கொள்வதுமில்லை பிறப்பிறப்பு

முதல் பக்கம்


No comments:

Post a Comment