Sunday, December 5, 2021

11.தொன்று தொட்டு அகலாத ஒன்று(எண்ணிரண்டு பதினாறு வயது)

 1. (96-10


11. (96-104)
அஜஸ் சர்வேஸ்வரஸ்  சித்த  சித்திஸ்  சர்வாதிர ச்யுத: வ்ருஷாகபி  ரமேயாத்மா  சர்வயோக  விநிச்ஸ்ருத: ||

பிறந்திடாத ஒன்றும்நீ இருந்திருக்கு மொன்றும்நீ
கரைந்தழைக்கும் நெஞ்சிலே விரைந்துசெல்லு மெண்ணம்நீ
குறைபடா திரும்நிறை உரைபடா துறும்மறை
விரைபடு மிலக்குநீ துலங்குகின்ற சோதிநீ

யாது மானவாதிநீ ஒதும்நல்ல வேதம்நீ
எழும்மறத்தி னூழிலே விழும்விதத்தி லாகவே 
ஆழ்ந்தமிழ்ந்த புவிதனை காத்தநல்வ ராஹம்நீ
 கற்றுறாச் சிறப்புநீ பற்றுராப் பிறப்புநீ




தொன்று-தொட்டு அகலாத-ஒன்று
(SM)
தொன்று-தொட்டு அகலாத-ஒன்று 
சொல் இவ்வுலகில் என்..று அது  தோன்றி நின்றதென்று
தொன்று-தொட்டு அகலாத-ஒன்று 
சொல் இவ்வுலகில் என்..று அது  தோன்றி நின்றதென்று
தொன்று-தொட்டு அகலாத-ஒன்று 
(MUSIC)
நெஞ்சுருகி  நீ அழைத்தால் உன்னிடத்தில்  விரைவாய் 
சங்கினொடு சக்கரமும் தானெடுத்து வருவான்
நெஞ்சுருகி  நீ அழைத்தால் உன்னிடத்தில்  விரைவாய் 
சங்கினொடு சக்கரமும் தானெடுத்து வருவான்
 சங்கினொடு சக்கரமும் ... தானெடுத்து .. வருவான்
தொன்று-தொட்டு அகலாத-ஒன்று 
சொல் இவ்வுலகில் என்..று அது  தோன்றி நின்றதென்று
தொன்று-தொட்டு அகலாத-ஒன்று 
(MUSIC)
ஆ .. (in  karaoke)
ஆழ்ந்தமிழ்ந்த புவிதனையே காத்த அந்த பெருமான் கற்றதிலும் பெற்றதிலும் பற்றுதனைத் துறந்தான்
ஆழ்ந்தமிழ்ந்த புவிதனையே காத்த அந்த பெருமான் கற்றதிலும் பெற்றதிலும் பற்றுதனைத் துறந்தான்

கற்றதிலும் பெற்றதிலும் பற்றுதனைத் துறந்தான்
தொன்று-தொட்டு அகலாத-ஒன்று 
சொல் இவ்வுலகில் என்..று அது  தோன்றி நின்றதென்று
தொன்று-தொட்டு அகலாத-ஒன்று 
(MUSIC)
குறைபடாத நிறையவன் தாள் போற்றிப் பாடிப் பணிவோம் (2)
அவன் உரைநடைக்ககப்படாத  வேத ஜோதிப் பெருமான் 
உரைப்பதற்குத் தோன்றிடாத மறையின் ஞானப் பெருமான்
தொன்று-தொட்டு அகலாத-ஒன்று 
சொல் இவ்வுலகில் என்..று அது  தோன்றி நின்றதென்று
தொன்று-தொட்டு அகலாத-ஒன்று 





 

No comments:

Post a Comment