Tuesday, November 10, 2015

8. ஞாலத்துயிர் செய்திடுவான்(கால மகள் கண்திறப்பாள்)-NOT Recorded

(65-74)
ஈஸான: பராணத: ப்ராணோ ஜ்யேஷ்ட: ஸ்ரேஷ்ட: பிரஜாபதி:|
ஹிரண்ய கர்போ பூகர்போ மாதவோ மதுஸூதன: ||

ஞாலத்துயிர் படைத்துகாத்து உயிருமா யிருப்பவன்
காலத்துக்கே காலம்சொல்லி காலம்கடந்து நிற்பவன்
சீலம்கண்டு போற்றலாகக் கோலம்கொண்ட கோமகன்
புலத்திருந்து உயிர்களுள்ளே உய்யுகின்ற உயிரிவன்

தங்கவண்ணம் எங்கும்மின்னும் அங்கம்கொண்ட தூயவன்
எங்கும்உயிர்கள் தங்கும்புவியை காவல்கொண்ட தாயவன்
கோதில்லாத சாதுக்களின் செயலும்பலனும் ஏற்பவன்
மாதவத்தில் மகரிஷிகள் மனதைவைக்கும் மாதவன்
 
(கால மகள் கண்திறப்பாள்-ஆனந்த ஜோதி)
 
 
ஞாலத்துயிர் செய்திடுவான் நாரணனே
அதைக் காத்து-உயிர் ஆ..குமவன் பூரணனே
(2)

போற்றிட-நல் சீலம்-கொண்டான் கோமகனே
அவன் உலகில்-உயிர் உள்-திகழும் ஆத்துமமே

ஞாலத்துயிர் செய்திடுவான் நாரணனே
அதைக் காத்து-உயிர் ஆ..குமவன் பூரணனே
(MUSIC)

அங்கமெல்லாம் தங்கம்-மின்னும் என்னும்-வண்ணத் தூயவனே
காவலனாய்க் காத்திடுவான் தாயைப்-போலவே

(2)
(Short Music)
அறிவிலியின் கோதுகளும் அதன்-வழியாம் குற்றங்களும்
கொண்டிடாத-சாதுக்களின் செயலும்-நாரணன் அதன் பலனுமானவன்
செயல் பலனும்-நாரணன்
(Short Music)
ஞாலத்துயிர் செய்திடுவான் நாரணனே
அதைக் காத்து-உயிர் ஆ..குமவன் பூரணனே
(MUSIC).. ஆஆ..(SHORT MUSIC)

கத்திய-ஓர் யானைக்குத்-தன் கருணை-தந்த தெய்வம்
நாதியில்லாப் பேதைகட்கும் துணை-இருந்த தெய்வம்

(1+SM+1)
உள்ளுக்குள்ளே ஒளியாய் ப்ரணவ-சாட்சி ஒலியாய்
என்றைக்குமே இருக்கும்-தெய்வம் அந்த-நாரணன்
என்றும் உள்ள-பூரணன் அன்பே என்று-ஆனவன்

(Short Music)
ஞாலத்துயிர் செய்திடுவான் நாரணனே
அதைக் காத்து-உயிர் ஆ..குமவன் பூரணனே ..ஆ.. .. ஆ..


 









 
 


Thursday, November 5, 2015

7 உலகோரே நாரணன் போல் (பொறந்தாலும் ஆம்பளையா)

 
 
7. (56-64)
அக்ராஹ்ய: சாஸ்வத: க்ருஷ்ணோ லோஹிதாக்ஷ: பிரதர்த்தந:
ப்ரபூத ஸ்த்ரிககுத்தாம பவித்ரம் மங்களம் பரம் ||
 புரிபடாத பொருளும்நீ முடிவிலாத ஏற்றம் நீ
கறைபடாத கொற்றம்நீ கருமை கொண்ட தோற்றம் நீ
சிவந்திருக்கும் தாமரை பழித்திருக்கு முன்விழி
அழித்துமூழில் நிற்பவன் அறிவில்சிறந்த விற்பனன்
*
உலகம்மூன்றின் காரணன் உணர்வுமூன்றின் பூரணன்
விளங்குதூய்மை கொண்டுமே தோன்றிநிற்கும் மங்கலன்
 *உலகம் மூன்று: பூ, விண், பாதாளம். உணர்வு மூன்று : ஜாக்ரத் (விழிப்பு), ஸ்வப்ன (கனவு), சுஷுப்தி (ஆழ் உறக்கம்)
________
 
( பொறந்தாலும் ஆம்பளையா )

உலகோரே நாரணன் போல் தெய்வமுமாரு
ஐயா யாருமுண்டோ காப்பதிலே அவனுக்கு நேரு
சொல்வீர்
உலகோரே நாரணன் போல் தெய்வமுமாரு
ஐயா யாருமுண்டோ காப்பதிலே அவனுக்கு நேரு

(SM)
உலகோரே நாரணன் போல் தெய்வமுமாரு
ஐயா யாருமுண்டோ காப்பதிலே அவனுக்கு நேரு

(VSM)
புரிந்திடுமோ-நன்கு தெரிந்திடுமோ-சொல்லு அவன்-திருப்பீ..டு
எந்நாளும் ஓர்-முடிவிலா ஏற்றத்தைக்-கொண்டு இருப்பவன் பாரு

உலகோரே நாரணன் போல் தெய்வமுமாரு
ஐயா யாருமுண்டோ காப்பதிலே அவனுக்கு நேரு
(MUSIC)

அவன்-திருத் தோற்றம் கறைபடுமோ
அவன்-எழில் தோற்றம் கருப்பெனுமோ
சிவந்திரும்-தாமரை நாணிடுமோ *அவனிருத் திரு-விழி கண்டி
டுமோ

சொல்லு
அவன்-திருத் தோற்றம் கறைபடுமோ
அவன்-எழில் தோற்றம் கருப்பெனுமோ
சிவந்திரும்-தாமரை நாணிடுமோ *அவனிருத் திரு-விழி கண்டி
டுமோ
அழித்துப்-பின் ஊழிலும் நிற்பவனே அஹ்ஹா 
அறிவினில்-சிறந்த விற்பனனே ஓஹ்ஹோ
உலகங்கள்-மூன்றின் காரணனே 
அஹ்ஹா 
 உணர்வுகள்-மூன்றின் பூரணனே ஓஹ்ஹோ
அழித்துப்-பின் ஊழிலும் நிற்பவனே 
அறிவினில்-சிறந்த விற்பனனே
உலகங்கள்-மூன்றின் காரணனே
 உணர்வுகள்-மூன்றின் பூரணனே
உலகோரே நாரணன் போல் தெய்வமுமாரு
ஐயா யாருமுண்டோ காப்பதிலே அவனுக்கு நேரு

(MUSIC)
தூக்கத்தி..லும்-அவன் விழித்திருப்பான்
விழிப்பிலும் யோகத்தின் துயிலுறுவான்
கனவெனும்-நிலையிலும் அவன் இருப்பான்
நினைவிலும் நிறைந்திடும் ஓர் பெருமான்..

இருக்கிற யாவிலும் உயர்வவனே
மரிக்கிற நிலையிலும் உயிர் அவனே
எரிகிற தீயிலும் குளிர்பவனே
உறைகிற குளிரிலும் இதம் அவனே
உலகோரே நாரணன் போல் தெய்வமுமாரு
ஐயா யாருமுண்டோ காப்பதிலே அவனுக்கு நேரு