Tuesday, November 10, 2015

8. ஞாலத்துயிர் செய்திடுவான்(கால மகள் கண்திறப்பாள்)-NOT Recorded

(65-74)
ஈஸான: பராணத: ப்ராணோ ஜ்யேஷ்ட: ஸ்ரேஷ்ட: பிரஜாபதி:|
ஹிரண்ய கர்போ பூகர்போ மாதவோ மதுஸூதன: ||

ஞாலத்துயிர் படைத்துகாத்து உயிருமா யிருப்பவன்
காலத்துக்கே காலம்சொல்லி காலம்கடந்து நிற்பவன்
சீலம்கண்டு போற்றலாகக் கோலம்கொண்ட கோமகன்
புலத்திருந்து உயிர்களுள்ளே உய்யுகின்ற உயிரிவன்

தங்கவண்ணம் எங்கும்மின்னும் அங்கம்கொண்ட தூயவன்
எங்கும்உயிர்கள் தங்கும்புவியை காவல்கொண்ட தாயவன்
கோதில்லாத சாதுக்களின் செயலும்பலனும் ஏற்பவன்
மாதவத்தில் மகரிஷிகள் மனதைவைக்கும் மாதவன்
 
(கால மகள் கண்திறப்பாள்-ஆனந்த ஜோதி)
 
 
ஞாலத்துயிர் செய்திடுவான் நாரணனே
அதைக் காத்து-உயிர் ஆ..குமவன் பூரணனே
(2)

போற்றிட-நல் சீலம்-கொண்டான் கோமகனே
அவன் உலகில்-உயிர் உள்-திகழும் ஆத்துமமே

ஞாலத்துயிர் செய்திடுவான் நாரணனே
அதைக் காத்து-உயிர் ஆ..குமவன் பூரணனே
(MUSIC)

அங்கமெல்லாம் தங்கம்-மின்னும் என்னும்-வண்ணத் தூயவனே
காவலனாய்க் காத்திடுவான் தாயைப்-போலவே

(2)
(Short Music)
அறிவிலியின் கோதுகளும் அதன்-வழியாம் குற்றங்களும்
கொண்டிடாத-சாதுக்களின் செயலும்-நாரணன் அதன் பலனுமானவன்
செயல் பலனும்-நாரணன்
(Short Music)
ஞாலத்துயிர் செய்திடுவான் நாரணனே
அதைக் காத்து-உயிர் ஆ..குமவன் பூரணனே
(MUSIC).. ஆஆ..(SHORT MUSIC)

கத்திய-ஓர் யானைக்குத்-தன் கருணை-தந்த தெய்வம்
நாதியில்லாப் பேதைகட்கும் துணை-இருந்த தெய்வம்

(1+SM+1)
உள்ளுக்குள்ளே ஒளியாய் ப்ரணவ-சாட்சி ஒலியாய்
என்றைக்குமே இருக்கும்-தெய்வம் அந்த-நாரணன்
என்றும் உள்ள-பூரணன் அன்பே என்று-ஆனவன்

(Short Music)
ஞாலத்துயிர் செய்திடுவான் நாரணனே
அதைக் காத்து-உயிர் ஆ..குமவன் பூரணனே ..ஆ.. .. ஆ..


 









 
 


No comments:

Post a Comment