Tuesday, June 30, 2015

பலஸ்ருதி-வேத மெய்ப்பொருள்(காதலின் பொன் வீதியில்)

 




 
“ராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரா நனே”
                            -    ராம என்னும் ஒரு நாமம் சஹஸ்ரநாமப் பலனைத் தரும்
 
 
 
( காதலின் பொன் வீதியில் )
 
ஆ...ஓ..ஆ..
வேத மெய்ப்பொருள் ஆகுமே ராம்-எனும் ஓர் நாமமே
நெஞ்சே-நீ உருகிச் சொல்லேன்-பாழ் உன்-கேடு விலக்கித்தள்ளேன்
ராம்-எனும் ஓர்-நாமமே  ஆயிரம் பேராகுமே
என்றே அம்மகிமை சொன்னார் ராம் என்றே-நம் சிவபெருமான்
 (MUSIC)
 திருப்பாற்கடலில் துயில்-நாரணனே புவியாட வந்தான் அழகாக
அந்த ஓம் எனும்-தேன் தனை-ராம்-எனவே பெயர் கொண்டு வந்தான் நமக்காக
(Short Music)
அந்தப் பெயரினையே சொல்லத் தோன்றிடுமாம்
நான் என்றிடும்-மெய் மெதுவாக
என் நெஞ்சமே-நீ இனிச் சொல்லிடுவாய்
நிஜம் கண்டிடுவாய் அழகாக
 வேத மெய்ப்பொருள் ஆகுமே ராம்-எனும் ஓர் நாமமே
(MUSIC)
விழி ஊறிடவே உன் நாவினிலே ராம் ராம்-எனலே ஜபமாகும்
அந்தப் பெயரினிலே உள்ள பொருளுணர்ந்து
அதை உரைத்து விட்டால் சுபமாகும்
(SM)
ராம ஜபத்துடனே சேவை கையில்-கொண்டால்
அது வழங்கிடுமே பேரின்பம்
உந்தன் யாக்கை-எனும் ஒரு கவலையில்லை
இனி காலமெல்லாம் சாயுஜ்யம்
வேத மெய்ப்பொருள் ஆகுமே ராம்-எனும் ஓர் நாமமே
நெஞ்சே-நீ உருகிச் சொல்லேன்-பாழ் உன்-கேடு விலக்கித்தள்ளேன்
ஆ...ஓ..ஆ..
 
 


No comments:

Post a Comment