Monday, June 29, 2015

3 & 4 யோகம் பிறந்தது(உலகம் பிறந்தது எனக்காக) (25-45)

 
 
(18-24)
யோகோ யோக விதம் நேதா பிரதான புருஷேச்வர:|
நாரசிம்ஹவபு: ஸ்ரீமான் கேசவ புருஷோத்தம: ||


யோகம்தன்னில் உதிப்பவன் யோகம்கூட உதவுவான் லோகம்தன்னில் தலையவன் சிம்மத்தலையில் தோன்றுவான்
திருமகளின் துணையவன் சுருண்டகுழலில் அழகிவன்

பிறந்திருக்கு மேழுலகின் சிறந்ததொரு நாயகன்
 (25-36)


ஸர்வ: ஸர்வ: சிவஸ்தாணுர் பூதாதிர் நிதிரவ்யாய:
சம்பவோ பாவனா பார்த்தா பிரபவ: பிரபுரீச்வர:

யாதுமாக நின்றுஊழில் யாதும்போக சென்றழித்து தூய்மையாகி யேதிடத்து நின்றிருக்கு முன்னிடத்து
ஓய்ந்திடாத தோர்திறத்து தோன்றுகின்ற உயிர்கள்சென்று
ஓயுகின்ற தோரிடத்தின் ஊழினுள்ளு மேஇருந்து

நிகழ்வதில் லிருந்திருந்த ளிப்பதில்ம கிழ்ந்திருந்து
விழைவுடன்ப டைத்திருந்த னைத்துமிங்கு காத்துநின்று
பிழைபடா துடைதிறத் துடைத்துநின் கொடைகொடுத்து
குறைபடா தளிக்கும்நீயும் மன்னர்மன்ன னல்லவோ..!

** பழுதற்ற முழுமையான அறிவுடைய இவன், தீமைகளை உடைத்து , வேண்டுவன கொடுத்து வேண்டுவன அற்ற மன்னனானவன்.


( உலகம் பிறந்தது எனக்காக )

 
யோகம் பிறந்தது உன்னாலே யோகம் கூடிட நீ தானே
லோக-நாதனும் நீ தானே அந்த ஹரி-நர..சிம்மனும் நீ தானே
  யோகம் பிறந்தது உன்னாலே யோகம் கூடிட நீ தானே (2)
லோக-நாதனும் நீ தானே அந்த ஹரி-நரசிம்மனும் நீ தானே
யோகம் பிறந்தது உன்னாலே யோகம் கூடிட நீ தானே
(MUSIC)
சுருண்ட-குழலின் அழகினிலே மயங்கிக் கிடந்தாள் திருமகளே
 உலகம்-ஏழினை படைத்தவனே
படைத்த அனைத்தையும் காப்பவனே
 (2)
யோகம் பிறந்தது உன்னாலே யோகம் கூடிட நீ தானே
(MUSIC)
யாதும் நீயாய் ஆகிவிடும் காக்கும் தாயாய் உனது மனம்
தூய்மை வாழும் இடமாகும் உனது மனமே  திடமாகும்  (2)
யோகம் பிறந்தது உன்னாலே யோகம் கூடிட நீ தானே
(MUSIC)
நன்றாய்-ஓய்ந்தே கிடந்தாலும் விண்ணை-மண்ணைக் காத்திருக்கும்
அன்னை வடிவே உன்ரூபம் நீயே ஊழியின் ஆனந்தம் (2)
யோகம் பிறந்தது உன்னாலே யோகம் கூடிட நீ தானே (2)
லோக-நாதனும் நீ தானே அந்த ஹரி-நரசிம்மனும் நீ தானே
  யோகம் பிறந்தது உன்னாலே யோகம் கூடிட நீ தானே
 
 
 

No comments:

Post a Comment