Friday, June 26, 2015

1. இதோ இந்த உலகமாக(அதோ அந்த பறவை போல) (1-9)


 
1. (1-9)
விஸ்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூதபவ்ய பவத் பிரபு:
பூதக்ருத் பூத்ப்ருத் பாவோ பூதாத்மா பூத பாவன :
 
 அண்டமாய்ப்பே ரண்டமாய் தோன்றுதேவி ராடமாய்

இடம்விடாத ஒன்றுமாய் விளங்குகின்ற தெங்குமாய்

கண்டுகொள்ள தொண்டரால் பண்ணிசைக்கும் சின்னமாய்

நேற்றுமின்று நாளையாய்ப் போற்றுகின்ற ஒன்றுமாய்

தோற்றிஉயிரைப் பேணுவான் பெற்றபிள்ளை போலவே

உற்றுமதனில் வாழுவான் உள்ளினுள்ளு மாகவே

கிடந்தசைந் திருப்பவன் அனைத்தினுள்ளு மேயவன்

படைத்தயாவும் தோன்றவளரக் காரணமே தானவன்
______________
 
 
( அதோ அந்த பறவை போல )
 
 
இதோ இந்த உலகமாகத் தோன்றும் மாலே
அதோ அந்த அண்டமாய்-வி..ரிந்த-வானே
ஒரே ஆண்டவன் ஒன்றே..யானவன் (2)
ஒரே ஆன்மம் ஆன-பரமன் தானவன்
(SM)
இதோ இந்த உலகமாகத் தோன்றும் மாலே
அதோ அந்த அண்டமாய்-வி..ரிந்த-வானே
ஒரே ஆண்டவன் ஒன்றே..யானவன் 
ஒரே ஆன்மம் ஆன-பரமன் தானவன்
(MUSIC) 
லாலாலா லா..
(SM)
நேற்று-இன்று நாளை-என்ற கணக்கில்-மாலனே
இலன் என்ற உணர்வில்-நாமும் திளைக்க வேண்டுமே
திளைக்க வேண்டுமே
காலம்-என்ற கட்டுக்குள்-இ..றைவன் இல்லையே
பாடிப்-போற்ற சின்னமாகும் அவனின் மேன்மையே
ஒரே ஆண்டவன் ஒன்றே..யானவன்
ஒரே ஆன்மம் ஆன-பரமன் தானவன்

இதோ-இந்த உலகமாகத் தோன்றும் மாலே
அதோ-அந்த அண்டமாய்-வி..ரிந்த-வானே
ஒரே ஆண்டவன் ஒன்றே..யானவன்
ஒரே-ஆன்மம் ஆன-பரமன் தானவன்
 (MUSIC)
லாலாலா லா
(MUSIC)
தோற்றி-உயிரைப் பிள்ளை-போலப் பேணும்-நெஞ்சிலே
அவனுக்கீடு சொல்ல-ஒன்று எங்கும்-இல்லையே
எங்கும்-இல்லையே
வாழ்க்கை-என்று அவனுக்கென்று ஒன்று-இல்லையே
உயிரில்-வாழ்க்கை அவனை-அன்றி நடப்பதில்லையே
ஒரே ஆண்டவன் ஒன்றே..யானவன்
ஒரே ஆன்மம் ஆன-பரமன் தானவன்
இதோ இந்த உலகமாகத் தோன்றும் மாலே
அதோ அந்த அண்டமாய்-வி..ரிந்த-வானே
ஒரே ஆண்டவன் ஒன்றே..யானவன்
ஒரே ஆன்மம் ஆன-பரமன் தானவன்
 (MUSIC)
லாலாலா லா 
(MUSIC)
 கோடி-வகையில் உயிர்கள்-தோன்ற வைக்கும் அவன்-கலை
கோவில்-தோறும் தோற்ற..மாகும் அவனின் பலசிலை
அவனின் பலசிலை
அசைவு-இன்றிக் கிடக்கும் அவனின் யோகப் பெருநிலை
  அவனிலாமல் அசைந்திடாது சின்னஞ்சிறு இலை
ஒரே ஆண்டவன் ஒன்றே..யானவன்
ஒரே ஆன்மம் ஆன-பரமன் தானவன்
இதோ-இந்த உலகமாகத் தோன்றும் மாலே
அதோ-அந்த அண்டமாய்-வி..ரிந்த-வானே
ஒரே ஆண்டவன் ஒன்றே..யானவன்
ஒரே ஆன்மம் ஆன-பரமன் தானவன்
 
 


No comments:

Post a Comment