Thursday, November 5, 2015

7 உலகோரே நாரணன் போல் (பொறந்தாலும் ஆம்பளையா)

 
 
7. (56-64)
அக்ராஹ்ய: சாஸ்வத: க்ருஷ்ணோ லோஹிதாக்ஷ: பிரதர்த்தந:
ப்ரபூத ஸ்த்ரிககுத்தாம பவித்ரம் மங்களம் பரம் ||
 புரிபடாத பொருளும்நீ முடிவிலாத ஏற்றம் நீ
கறைபடாத கொற்றம்நீ கருமை கொண்ட தோற்றம் நீ
சிவந்திருக்கும் தாமரை பழித்திருக்கு முன்விழி
அழித்துமூழில் நிற்பவன் அறிவில்சிறந்த விற்பனன்
*
உலகம்மூன்றின் காரணன் உணர்வுமூன்றின் பூரணன்
விளங்குதூய்மை கொண்டுமே தோன்றிநிற்கும் மங்கலன்
 *உலகம் மூன்று: பூ, விண், பாதாளம். உணர்வு மூன்று : ஜாக்ரத் (விழிப்பு), ஸ்வப்ன (கனவு), சுஷுப்தி (ஆழ் உறக்கம்)
________
 
( பொறந்தாலும் ஆம்பளையா )

உலகோரே நாரணன் போல் தெய்வமுமாரு
ஐயா யாருமுண்டோ காப்பதிலே அவனுக்கு நேரு
சொல்வீர்
உலகோரே நாரணன் போல் தெய்வமுமாரு
ஐயா யாருமுண்டோ காப்பதிலே அவனுக்கு நேரு

(SM)
உலகோரே நாரணன் போல் தெய்வமுமாரு
ஐயா யாருமுண்டோ காப்பதிலே அவனுக்கு நேரு

(VSM)
புரிந்திடுமோ-நன்கு தெரிந்திடுமோ-சொல்லு அவன்-திருப்பீ..டு
எந்நாளும் ஓர்-முடிவிலா ஏற்றத்தைக்-கொண்டு இருப்பவன் பாரு

உலகோரே நாரணன் போல் தெய்வமுமாரு
ஐயா யாருமுண்டோ காப்பதிலே அவனுக்கு நேரு
(MUSIC)

அவன்-திருத் தோற்றம் கறைபடுமோ
அவன்-எழில் தோற்றம் கருப்பெனுமோ
சிவந்திரும்-தாமரை நாணிடுமோ *அவனிருத் திரு-விழி கண்டி
டுமோ

சொல்லு
அவன்-திருத் தோற்றம் கறைபடுமோ
அவன்-எழில் தோற்றம் கருப்பெனுமோ
சிவந்திரும்-தாமரை நாணிடுமோ *அவனிருத் திரு-விழி கண்டி
டுமோ
அழித்துப்-பின் ஊழிலும் நிற்பவனே அஹ்ஹா 
அறிவினில்-சிறந்த விற்பனனே ஓஹ்ஹோ
உலகங்கள்-மூன்றின் காரணனே 
அஹ்ஹா 
 உணர்வுகள்-மூன்றின் பூரணனே ஓஹ்ஹோ
அழித்துப்-பின் ஊழிலும் நிற்பவனே 
அறிவினில்-சிறந்த விற்பனனே
உலகங்கள்-மூன்றின் காரணனே
 உணர்வுகள்-மூன்றின் பூரணனே
உலகோரே நாரணன் போல் தெய்வமுமாரு
ஐயா யாருமுண்டோ காப்பதிலே அவனுக்கு நேரு

(MUSIC)
தூக்கத்தி..லும்-அவன் விழித்திருப்பான்
விழிப்பிலும் யோகத்தின் துயிலுறுவான்
கனவெனும்-நிலையிலும் அவன் இருப்பான்
நினைவிலும் நிறைந்திடும் ஓர் பெருமான்..

இருக்கிற யாவிலும் உயர்வவனே
மரிக்கிற நிலையிலும் உயிர் அவனே
எரிகிற தீயிலும் குளிர்பவனே
உறைகிற குளிரிலும் இதம் அவனே
உலகோரே நாரணன் போல் தெய்வமுமாரு
ஐயா யாருமுண்டோ காப்பதிலே அவனுக்கு நேரு
 
 
 
 
 



No comments:

Post a Comment